தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பசுமையை உருவாக்கும் வகையில் ஆல்கன் டிரஸ்ட் சார்பில் தூத்துக்குடி தொகுதி முழுவதும் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு பகுதியில் தேவையான இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. 423வது வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் தலைமை வகித்தாா்.
தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி அம்பேத்கார் நகர் சுந்தரவேல்புரம் மாநகராட்சி விளையாட்டு திடல் அருகில் உள்ள தெருக்களில் மரக்கன்றுகள் நட்டினாா்கள். பொதுமக்கள் பலரும் மரக்கன்றுகளை வாங்கி சென்றனா்.
விழாவில் மாநில திமுக பேச்சாளா் சரத்பாலா, மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர திமுக ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் கருப்பசாமி, கவுன்சிலா் நாகேஸ்வாி தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநில தலைவர் மருதப்பெருமாள், சுற்றுக்சூழல் அணி வேல்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனா்.