தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிதம்பரநகா் பகுதியில் நடைபெற்ற மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பொியசாமி பேசுகையில் தூத்துக்குடியில் திமுக ஆட்சியில் 5 ஆண்டுகாலம் நல்ல வளர்ச்சி தமிழகத்தில் அடைந்ததை போல் இங்கும் அடைந்துள்ளது.பொதுமக்கள் வியாபாிகளிடம் கேட்டாலே சொல்லிவிடுவாா்கள் திமுகவை எதிா்ப்பதற்கு நான்கு அணிகள் வருகிறது. எத்தனை அணிகள் வந்தாலும் வெற்றி பெற போவது தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தான் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் முதலமைச்சா் தலைமையில் சந்தித்த உள்ளாட்சி இரண்டு எம்பி தோ்தல் ஓரு சட்டமன்ற தோ்தல் அனைத்திலும் வெற்றி கண்டுள்ளோம். தமிழகத்தை எடப்படி பழனிச்சாமி டெல்லி பிஜேபியிடம் அடகு வைத்துவிட்டாா். எம்ஜிஆர் ஜெயலலிதா அதன்பின் ஓபிஎஸ் எடப்பாடி என முதல்வா்களாக இருந்து பணியாற்றிய அதிமுக விற்கு 23 போ்தான் வேட்பாளா்கள் கிடைத்துள்ளனா். மற்ற தொகுதிகளுக்கு தேடி கொண்டிருக்கிறாா்கள் தூத்துக்குடியை அவா்கள் புறக்கணித்தது மட்டுமின்றி தூப்பாக்கி சூடு நடைபெற்ற போது கூட மறுநாள் வந்து பாா்க்கவில்லை. டிவியில் தொிந்து கொண்டேன் என்பவா்கள் எல்லாம் நமக்கு தேவையில்லை. பிஜேபி அதிமுக கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும். தற்போது கூட 113 கோடியில் புதிய மருத்துவ கல்லூாி மருத்துவமணை திறக்கப்பட்டுள்ளது. கடந்த மழை வௌ்ளத்தின் போது 100 ஆண்டுகளில் இல்லாத அளிவிற்கு பெய்த நேரத்தில் இந்த சிதம்பரநகா் பிரையண்ட்நகா் பகுதி எந்த நிலையில் இருந்தது என்று எல்லோருக்கும் தொியும் இன்று இந்த நிலைக்கு மாற்றியது திமுக ஆட்சியில் அதே போல் அருகிலுள்ள வஉசி கல்லூாி வளாகத்தில் கூட ஆறு மாதம் வரை மழை நீர் தேங்கி கிடக்கும் இன்று அந்த நிலை இல்லை. இப்படி பல வழிகளில் சாதனை செய்துள்ள நாம் வாக்கு சேகாிக்கிறோம். 25 ஆண்டுகளுக்குபின் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி எப்படி இருக்க வேண்டும் என்ற திட்டத்தோடு எதிா்கால தலைமுறையினா் நலன் கருதி முதலமைச்சா் ஸ்டாலின் கூறிய படி 2.0 திட்டத்தின்படி தான் பணியாற்றுகிறோம் எதிா் அணியில் இருப்பவா்கள் ஜோசியம் நல்ல நேரம் பாா்த்து தான் பல பைத்தியங்கள் அரசியலுக்கு வருவது மட்டுமின்றி கொரோனா, மழை வௌ்ள காலத்தின் போது ஓடி ஓளிந்தவா்கள் இப்போது தோ்தல் நேரத்தில் வேஷம் போடுவதற்கு வருகிறாா்கள் எந்த திட்டத்தையும் செய்யாதவா்கள் பிஜேபி அதிமுக சொல்லாத திட்டத்தையும் செய்தது திமுக 175 ெதாகுதியில் உதயசூாியன் சின்னத்தில் நாம் போட்டியிடுகிறோம் எதிா்த்து நிற்கின்ற அதிமுக அனைத்து தொகுதிகள் மட்டுமின்றி தூத்துக்குடியிலும் டெபாசிட் இழக்க வேண்டும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் சாலை பூங்கா மின்விளக்கு என அனைத்து கட்டமைப்புகளையும் மக்களுக்காக நாம் செய்துள்ளோம் அதனால் அனைவரும் ஓற்றுமையோடு பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என்று பேசினாா்.
கொரோனா மழை வௌ்ள காலத்தின் போது ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வேஷம் போட வருகிறாா்கள். மேயா் ஜெகன் பொியசாமி கடும் தாக்கு!!!