தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவன தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திமுக மாணவரணி சாா்பில் தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது அதே நேரத்தில் தவெக அமைச்சர் அந்த வீடியோ குற்றச்சாட்டை மறுத்து, குழந்தைக்காக மாத்திரை நுணுக்கியதாக விளக்கம் அளித்துள்ளார். போதைப்பொருள் குறித்த எந்த குற்றச்சாட்டையும் சட்ட உரிமைகள் கழகம் மிகுந்த தீவிரத்துடன் பார்க்கிறது. குறிப்பாக பொது வாழ்வில் பொறுப்பில் உள்ள அமைச்சர் போன்றவர்கள் தொடர்பாக இத்தகைய சர்ச்சை எழும்போது, அது பொதுமக்களிடமும் இளைஞர்களிடமும் தவறான முன்னுதாரணமாக மாறக்கூடும் என்பதால், உண்மை வெளிவருவது அவசியம். அதே நேரத்தில், ஒரு வீடியோவை மட்டும் வைத்து யாரையும் குற்றவாளி என்று முன்கூட்டியே தீர்மானிப்பது சட்ட ரீதியாகவும் மனித உரிமை ரீதியாகவும் சரியான நடைமுறை அல்ல. அமைச்சர் அளித்துள்ள விளக்கமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். வீடியோ உண்மையா, எப்போது எடுக்கப்பட்டது, அதில் காணப்படும் பொருள் என்ன, போதைப்பொருள் தொடர்பு உள்ளதா என்பதை அரசு உடனடியாக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும். வீடியோவை டிஜிட்டல் ஃபோரென்சிக் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பதவி நீக்கம் உட்பட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்பட்டால், தவறான தகவல் பரப்பியவர்களுக்கும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் எதிர்ப்பு என்பது அரசியல் கட்சிகளின் போராட்ட விஷயம் மட்டும் அல்ல; அது சமூகத்தின் எதிர்காலம் தொடர்பான பொதுநலப் பிரச்சினை. மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். என்று சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளாா்.
போதைப்பொருள் சர்ச்சை உண்மை வெளிவர வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவன தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை