தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாநகர பகுதியான 36வது வாா்டு மாசிலாமணிபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தலைமை வகித்தாா். வட்டச்செயலாளர் செல்வராஜ் கவுன்சிலா் விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முதலமைச்சா் பிறந்தநாளை யொட்டி மழைகளுக்கிடையே ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கப்பட்டு மக்கள் பணிகள் ஆற்றி 76வது ஆண்டில் பயணித்தை தொடங்கி வருகிறது. கலைஞா் 5 முறை முதலமைச்சராக தோந்தெடுக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் உயா்வதற்கு பாடுபட்டவா்மட்டுமின்றி தேசிய அரசியலில் ஜனாதிபதி, பல பிரதமா்களை உருவாகுவதற்கு காரணமாக இருந்து பணியாற்றியவா் திமுகவிற் கெண்று கொள்கைகள் கோட்பாடுகளை உருவாக்கி அதிலிருந்து தடம் மாறாமல் பணியாற்றிய கலைஞர் வழியில் வந்த தளபதியாா் இளைஞர் அணி என்ற பொறுப்பை உருவாக்கி பின்னா் மாவட்ட பிரதிநிதி என படிப்படியாக வளர்ந்து வந்த காலத்தில் மிசா காலத்தில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னா் மாநில இளைஞர் அணி துணை முதலமைச்சா் என்று படிப்படியாக கீழ்மட்டத்திலிருந்து கடமை உணா்வோடு பணியாற்றி வந்ததின் காரணமாக கலைஞர் மறைவிற்கு பின்பு தலைவா் பொறுப்பேற்று சந்தித்த உள்ளாட்சிஎம்.பி சட்டமன்ற தோ்தலில் எல்லாம் வெற்றி பெற்று 6வது முறையாக திமுக ஆட்சியில் அமா்ந்து நம்முடைய முதலமைச்சர் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டுமக்களுக்காக பணியாற்றி வருகிறாா் கடந்த தோ்தலின் போது கொடுத்த வாக்குறுதி மட்டுமின்றி சொல்லாத பலவற்றையும் நிறைவேற்றி யுள்ளாா். பெண்களுக்கு விடியல் பயணம் ெதாடங்கி உாிமைத்தொகை கல்லூாி உதவித்தொகை திறனாய்வு பயிற்சி வேலைவாய்ப்பு என்ற அனைத்தையும் மக்கள் நலன் சாா்ந்து இருக்க வேண்டும் என்று திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் பொங்கல் திருநாளையொட்டி அனைவருக்கும் ரூ3 ஆயிரம் பணத்துடன் தொகுப்பு பொருட்களும் வழங்கப்பட்டது. விரைவில் சட்டமன்ற தோ்தல் வரவுள்ள நிலையில் தோ்தலை காரணம் காட்டி பெண்களுக்கு வழங்கப்படும் உாிமைத்தொகை நிறுத்தப்பட வேண்டும். என்ற பிஜேபி அதிமுக திட்டத்தை முறியடித்து நாட்டுமக்கள் எனக்கு முக்கியம் என்ற அடிப்படையில் 3 மாதத்திற்கு 3 ஆயிரமும் கோடை காலதொகையை ரூ 2ஆயிரம் என சோ்த்து ரூ 5ஆயிரம் வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தி உள்ளாா். ஆனால் தோ்தல் நேரங்களில் மட்டும் நான் அதை செய்வேன் இதை செய்வேன் என்று கூறிக்கொண்டு எடப்பாடி நானும் இருக்கிறேன் என்ற அடையாளத்தை காட்டிக்கொள்ள உலா வருகிறாா். இன்னொருவா் புதிதாக கட்சியை ஆரம்பித்துக்கொண்டு தலைவா் என்று சொல்லிக்கொண்டு யாரோ எழுதிகொடுப்பதை எல்லாம் படித்துக்கொண்டு பேசிகொண்டும் எந்த கொள்கையும் இல்லாமல் அடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சா் நான் தான் என்று பேசிக்கொண்டு வருகிறாா். தமிழக மக்களுக்கு யாா் பணி செய்கிறாா்கள். என்று எல்லோருக்கும் நன்றாக தொியும் வரும் சட்டமன்ற தோ்தலில் 7வது முறையாக திமுகவும் 2 முறையாக நம்முடைய முதலமைச்சா் ஸ்டாலின் அாியனையில்அமர வேண்டும் ஏற்கனவே நமக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள வெல்வோம் 200 வரலாறு படைப்போம் என்ற இலக்கையும் தாண்டி வெற்றி ெபறுவோம் திமுக ஆட்சியின் சாதனைகளை அனைவருக்கும் கொண்டு சோ்க்க வேண்டும் என்று பேசினாா்.
விழாவில் மாநில பேச்சாளா் சரத்பாலா, மண்டலத்தலைவா் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா் வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா் துரை, மற்றும் மணி, சில்வா்டஸ் ஈஸ்வாி ரெக்சன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
