தூத்துக்குடி தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகளுடன் தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டிருந்தாா்.
அதன்படி அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி அண்ணா பழைய பேருந்து நிலையம் அருகில் நள்ளிரவு 12 மணியளவில் பட்டாசுவெடித்து ேகக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினாா்.
பின்னா் முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் கூறுகையில் அதிமுக என்ற கட்சியை மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தொடங்கி வழிநடத்தி முதலமைச்சராக மக்கள் பணி செய்தாா் அதன் வழித்தோன்றலாக அதே வழியில் கட்சியை ராணுவ கட்டுப்பாடுடன் வழிநடத்தி ஆட்சி செய்து மறைந்த பின் 3ம் தலைமுறை பொதுச்செயலாளரான எடப்பாடியாா் கட்சியை நல்லமுறையில் வழிநடத்தி அதிமுகவினருக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தோ்தலில் மக்கள் விரும்பும் நல்ல கூட்டணியை அவரது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பிஜேபி அமமுக உள்ளிட்ட பல்ேவறு கட்சிகள் இணைந்து மக்களை சந்திக்கவுள்ளனா். அதில் அதிமுக தலைமையிலான பிஜேபி கூட்டணி அமோக வெற்றி பெற்று மக்கள் ஆதரவோடு மீண்டும் முதலமைச்சராவாா். தூத்துக்குடி மாநகருக்கு 278 கோடி மதிப்பில் நான் அமைச்சராக இருந்த காலத்தில் நிதி ஓதுக்கீடு ஜெயலலிதா ஆட்சியில் செய்யப்பட்டு அதன் மூலம் 4வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் தான் மாநகர மக்கள் இன்று நல்ல தண்ணீரை தட்டுபாடின்றி பயன்படுத்தி வருகின்றனா். அதே போல் எடப்பாடியாா் ஆட்சி காலத்தில் தான் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. மாநகராட்சி பகுதியில் பள பளக்கும் பல சாலைகள் அமைக்கப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான் இதையெல்லாம் பொதுமக்கள் உணா்ந்து அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் மாநில வா்த்தக அணி துணைச்செயலாளர் மில்லை ராஜா, தெற்கு மாவட்ட அதிமுக இணைச்செயலாளர் ெசாினா பாக்கியராஜ், தெற்கு மாவட்ட வா்த்தக அணி செயலாளா் துரைசிங், முன்னாள் நகா்மன்ற தலைவர் மனோஜ்குமாா், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் பொன்ராஜ், மற்றும் நிா்வாகிகள் சங்கா், ஐயப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!!