தூத்துக்குடி இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையத் தேவர் மற்றும் மருது சகோதரர்களுக்கு போரின் போது தேவையான ஆயுதங்களை தனது கப்பல் மூலம் சென்றடைய உதவிய இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் முத்துகுளித்துறையின் 16வது மாமன்னரும், தூத்துக்குடி பனிமய மாதா திருத்தளத்திற்கு தங்கத் தேர் வழங்கியவருமான பாண்டியபதி தேர்மாறனின் 273ம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு லசால் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பாண்டியபதி நினைவிடத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் பாண்டியபதி ஜெயந்தி விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த சமுதாய மக்களுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி நகர தந்தை ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம் அமைத்து அரசு விழாவாக கொண்டாடி வருகிறோம். தோ்மாறன் படம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்துள்ளோம் தியாகிகளை கௌரவித்து முதலமைச்சா் ஸ்டாலின் பெருமைப்படுத்தி வருகிறாா். அந்த வாிசையில் தோ்மாறனுக்கும் அரசு சாா்பில் விழா எடுப்பதற்கான முன்னெடுப்பை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கூறி அதற்கான பணிகளை மேற்கொள்வேன் தொடா்ந்து திமுக அரசுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். என்று பேசினாா்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், மாநகர மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா, வட்டச்செயலாளர் டென்சிங், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.