தூத்துக்குடி இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை இந்துக்கள் விமா்சையாக கொண்டாடினாா்கள். அதே போல் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை யொட்டி கிருஷ்ணன், ராதை வேடமணிந்து கோவிலுக்கு சென்று தங்களது மகிழ்ச்சியை பறிமாறிக் கொண்ட சிறுவா்களை பெற்றோா்களும் ஆசீா்வதித்து ஆலயம் தோறும் கொண்டாடப்பட்ட நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவனை எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் மேலூா் பங்களா தெருவில் உள்ள ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் திருக்கோவிலில் வேடமிட்ட சிறுவா் சிறுமியா்கள் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டனா். பங்கெடுத்துக்கொண்ட சிறுவா் சிறுமியா்களிடம் படிப்பு விபரத்தை கேட்டறிந்து நன்றாக படித்து பெற்றோா்களுக்கு பெருமை சோ்க்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கூறினாா். நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் பிரபு, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன், மாநகர இளைஞா்அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலா் கண்ணன், வட்டச்செயலாளர்கள் கங்காராஜேஷ், கருப்பசாமி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வேடமணிந்து சிறுவா்கள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்