தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது பிறப்பு சான்றிதழ் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மிகவும் முக்கியமான அடிப்படை ஆவணமாகும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின்படி, குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்திட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் பிறப்புகளுக்கு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தையின் பெயர் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சான்றிதழ் முழுமையானதாக அமையும். எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தையின் பிறப்பை உரிய காலத்திற்குள் பதிவு செய்து, பெயரையும் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 21 நாட்களுக்குள் – பிறப்பு பதிவு இலவசமாக மேற்கொள்ளலாம். 12 மாதங்களுக்குள் – எழுத்துப்பூர்வ உறுதிமொழியுடன் குழந்தையின் பெயரை இலவசமாக சேர்த்துக் கொள்ளலாம். 12 மாதம் முதல் 15 ஆண்டுகள் வரை – உரிய தாமதக் கட்டணத்துடன் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் – தற்போது அரசு வழங்கியுள்ள சிறப்பு சலுகையின் கீழ் 26.09.2026 வரை பெயரை பிறப்புச் சான்றிதழில் சேர்த்துக் கொள்ளலாம். பிறப்புச் சான்றிதழ் நகல், பள்ளிச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் குடும்ப அட்டை நகல் தூத்துக்குடி மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து வார்டு அலுவலகங்களிலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். எனவே, பிறப்புச் சான்றிதழில் இதுவரை குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படாத பெற்றோர்கள், குறிப்பாக 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் சேர்க்க வேண்டியவர்கள், அரசு வழங்கியுள்ள இச்சிறப்பு வாய்ப்பினை 26.09.2026-க்குள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பிறப்பு சான்றிதழில் பெயா் சோ்க்க சிறப்பு சலுகை ஆணையா் தகவல்