தூத்துக்குடி தூய மாியன்னை மகளிா் கல்லூரி என்எல்சி அனல் மின் நிலையம் இணைந்து சமூக நல மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் கல்லூரியில் வைத்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. விழாவிற்கு அருட்சகோதாி முனைவா் செயலாளர் குழந்தை தெரசஸ், அருட்சகோதாி முனைவர் முதல்வா் சிபானா, அருட்சகோதாி முனைவர் துணைமுதல்வா் எழிலரசி, அருட்சகோதாி முனைவர் சுயநிதி பிாிவு இயக்குநா் ஆரோக்கிய ஜெனீசியஸ் அல்போன்ஸ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கண் பரிசோதனை முகாமை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்து பேசுகையில் இந்த தூய மாியன்னை மகளிா் கல்லூாி பழமையான கல்லூரி இந்த கல்லூரியில் 2700 பெண்கள் படித்து வருகிறார்கள். பட்டப்படிப்பு முடித்தவுடன் பல்வேறு வகையில் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது தொடர்ந்து வேலை வாய்ப்பில் ஈடுபட்டாலும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் படிப்பு என்பது அசைக்க முடியாத சொத்து விலை மதிப்பில்லாதது ஒரு காலத்தில் செல்போன் என்பது கிடையாது கருப்பு கலர் டிவி தான் இருந்தது அதன் பிறகு பட்டன் போன் தான் மக்களிடம் இருந்தது ஆனால் தற்போது எல்லோரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது ஆனால் தேவைக்கு மட்டும் செல்போனை பயன்படுத்த வேண்டும் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்தால் கண் பாதிப்பு ஏற்படும் மனிதனின் பாா்வைக்கு முக்கிய பொறுப்பே கண் தான் அதனை நாம் பாதுகாக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் இப்போது போட்டிகள் நிறைந்த உலகம். எனக்குத் தெரிந்த நிறைய நபர்கள் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 15 மணி நேரம் புத்தகம் படித்த ஆட்கள் இருக்கிறார்கள். நான் ஆரம்பத்தில் 300 மரம் நான் நட்டினேன் அது தற்போது வளர்ந்து பயனுள்ளதாக உள்ளது ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு கொடுத்த அருமையான வாய்ப்பால் நான் மூன்று லட்சம் மரங்கள் தற்போது நட்டியுள்ளேன் தூத்துக்குடி மாநகரில் மழைக்காலத்தில் 45 நாட்கள் முதல் 50 நாட்கள் வரை மழை நீர் சில பகுதிகளில் தேங்கியிருந்தது அதனால் பள்ளிகள் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்தது அதனை முழுவதும் தற்போது நான் சரி செய்து எந்த ஒரு பாதிப்பும் இல்லாத வகையில் உருவாக்கி உள்ளேன் அதனை முடித்து தற்போது அடுத்த கட்டமாக எண்டு டு எண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது அதனால் தூசி இல்லாத வகையில் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்று அமைக்கப்பட்டேன் அதுபோல கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திரேஸ்புரத்திலிருந்து சாலைகளில் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு நகரை அழகு படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டமாக நான் நடைமுறைப்படுத்தி தான் வருகிறேன் உங்களுடைய கல்லூரிக்கு பின்புறமும் அகலமான சாலை உள்ளது எல்லா வசதிகளும் நான் செய்து கொடுத்துள்ளேன் நீங்களும் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க வேண்டும் தருவைகுளம் உரக்கிடங்கில் மரம் வைத்தால் வளராது என்று வனத்துறை அதிகாரிகள் கூட உறுதியாக கூறினார்கள் அதனை நான் ஓரு சவாலாக ஏற்றுக் கொண்டு தருவைகுளம் உரக்கிடங்கில் மரம் நடப்பட்டது ஆனால் தற்போது அங்கு பசுமை காடாக மாற்றப்பட்டு 3 லட்சம் மரக்கன்றுகள் அமைக்கப்பட்டுள்ளது தற்போது அது வளர்ந்து மரமாகவே உள்ளது அதை நான் சவாலாகவே ஏற்றுக்கொண்டு சாதித்து காட்டியுள்ளேன் நீங்கள் படித்து எங்கு சென்றாலும் படித்த கல்லூரிக்கும் தூத்துக்குடிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் செயல்பட்டு எல்லா வகையிலும் முன்னேற வேண்டும் என்று பேசினாா். பின்பு கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கினார்.
விழாவில் இணைப்பேராசிாியா் அனிலா மயிலி, உதவி போராசிாியா் மோி செல்வி, வட்ட செயலாளர் ரவீந்திரன்,போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், மேயா் நோ்முக உதவியாளா் ரமேஷ் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
வனத்துறை அதிகாரிகள் கூட இந்த இடத்தில் மரம் வளராது என்றார்கள். மரம் வைத்து பசுமை காடாக மாற்றி சாதித்து காட்டியுள்ளேன் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு