தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் இதனையடுத்து அதிகாரிகள் பல்வேறு வியாபாரிகளிடம் வசூல் செய்து வருகின்றனர் வருகிற 5ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று ஆணையர் ப்ரியங்கா அறிவித்து நான்கு மண்டலத்திற்கும் அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டார். நான்கு மண்டலத்திற்கும் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள். ஏஜென்சிகள். மொத்த வியாபாரிகளிடம் ஒரு லட்சம் மரக்கன்றுகளை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநகர பகுதியில் மரக்கன்று நடப்படுகிறது அதற்கு கூண்டு உள்ளிட்டவைகள் தேவைப்படுகிறது ஆகையால் நீங்கள் நிதி உதவி வழங்க வேண்டும் என்று மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் இவ்வளவு பணம் வேண்டும் என்று வியாபாரிகளிடம் கடுமையான கெடுபிடி செய்து வசூல் செய்து வருகின்றனர் இது வியாபாரிகள் மத்தியில் மாநகராட்சி மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிந்தாலும் ஆணையர் உத்தரவு என்பதால் ஆணையர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்பெல்லாம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஹைமாஸ் லைட் வியாபாரிகளிடம் வசூல் செய்யப்பட்டால் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் ஆனால் தற்போது ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு பண வசூல் செய்வதற்கு யார் அனுமதி அளித்தது மரக்கன்று நடும் விழா என்ற பெயரில் மாநகராட்சி அதிகாரிகள் நான்கு மண்டலத்திலும் உள்ள பல்வேறு வியாபார நிறுவனத்தில் வசூல் செய்து வருகின்றனர் ஆகையால் மாநகராட்சி ஆணையர் உடனடியாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநகர் பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு அனைத்து பகுதிகளிலும் பண வசூல் செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும் வசூல் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் நான்கு வருட காலத்தில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகள் மாநகா் பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதி முழுவதும் நடப்பட்டுள்ளது தற்போது புதியதாக ஆணையர் ப்ரியங்கா ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவித்து இருப்பது வியப்பாகவே உள்ளது இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட மண்டல தலைவர்கள் பெயர் இடம் பெறவில்லை அந்தந்த பகுதியில் நடைபெறும் மாமன்ற உறுப்பினர்கள் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பும் நிலை உருவாகியுள்ளது.
வசூல் மனழயில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது யார். அரசு மீது அதிருப்தியில் வியாபாரிகள்.