தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 43 வது வார்டு பக்கிள்புரம் மூன்றாவது தெருவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
அப்ேபாது அந்தப் பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், சிறு பிள்ளைகள் அதிகமாக பாதிக்கக்கூடிய குறிப்பாக ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற நோய்களை வர வைக்கக்கூடிய வெளிநாட்டை சார்ந்த கோனோகார்பஸ் என்ற மரம் அந்த தெருவில் இருக்கிறது. அதை நீங்கள் அகற்றி விடுங்கள் என்று மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஹசன் பொதுமக்கள் முன்னிலையில் கோரிக்கை வைத்தனா்.
உடனே ஆணையா் ப்ாியங்கா அரசு அதிகாரிகளை அனுப்பி இந்த மரத்தை ஆய்வு செய்து உடனடியாக அகற்றி விடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த மரம் கடந்த 10 வருடங்களாக இருக்கிறது. இதைப் பற்றி பலமுறை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அதைப்பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. ஆனால் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆய்வுக்கு வந்த பொழுது அந்த மரத்தை பற்றி சொன்னதும் அவர் உடனே அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து அந்த மரத்தை உடனடியாக அகற்ற சொன்னார். மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவிற்க்கு பக்கிள்புரம் 3வதுதெரு பகுதி மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொண்டனா்.