அமைச்சர் மதன் ராஜா தொகுதியில் இந்த கிராமத்தில் இப்படி ஒரு நிலைமை. கொந்தளிக்கும் பெண்கள். தீர்வு தான் எப்போது.
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மிகப்பெரிய பஞ்சாயத்து மாப்பிள்ளை யூரனி பஞ்சாயத்து இந்த பஞ்சாயத்தில் மொத்தம் 81 கிராமங்கள் உள்ளது. 69 கிராமம் அனுமதி பெற்றது இந்த கிராமத்தில் மொத்த மக்கள் தொகை ஒரு லட்சத்து ஐயாயிரம் பேர் இந்த பஞ்சாயத்தில் குடி இருக்கின்றனர் இதில் வாக்காளர்கள் மட்டும் 35500 பேர் உள்ளனர். இந்தக் கிராமத்தில் தான் குடிநீர் பிரச்சனை தலை தூக்கி உள்ளது இந்த கிராமத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க வேண்டும் என்றால் 95 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. மாப்பிள்ளையூரனி உள்ளாட்சி பதவிகளில் இருந்த வரை இந்த பஞ்சாயத்துக்கு 28 லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டிருந்தது இந்த கிராமத்திற்கு மங்களக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது இந்த பஞ்சாயத்தில் 55 குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது இதன் மூலம் தான் இந்த பஞ்சாயத்துக்கு அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது ஆனால் தற்போது 8 லட்சம் லிட்டர் குடிநீர் தான் இந்த பஞ்சாயத்துக்கு வருகிறது இதனால் தான் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் பைப் லைன் புதியதாக பதிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் தற்போது அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது அதுபோக மங்களக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து மாப்பிள்ளை யூரணிக்கு வரும் குடிநீர் பைப் லைன் 18 லட்சம் தண்ணீர் வரக் கூடிய அளவுக்கு தான் பைப்லைன் பதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது கடந்த திமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் மாப்பிள்ளையூரனிபஞ்சாயத்தில் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்கு பஞ்சாயத்து மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதால் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்துக்கு தேவையான 95 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது தற்போது அந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தனைக்கும் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மதன் ராஜா அவர் அமைச்சராகவும் உள்ளார் ஆனால் இதுவரை மாப்பிள்னளயூரனிபஞ்சாயத்தில் வந்து மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மதன் ராஜா வந்து இதுவரை மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை நாங்கள் குடிநீர் பிரச்சனையில் திண்டாடி வருகிறோம் என்ற ஒரு குற்றச்சாட்டும் வருகிறது இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பெண்களிடம் கேட்டபோது சொன்ன ஒரே பதில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது ஒரு ட்ரம் தண்ணீர் 150 ரூபாய்க்கு வாங்க வேண்டியது உள்ளது 10 நாட்களுக்கு ஒரு முறை தான் பஞ்சாயத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது அதுவும் 2 குடம் தண்ணீர் தான் கிடைக்கிறது இரண்டு குடம் தண்ணீர் வைத்து நாங்கள் என்ன செய்ய முடியும் வாரத்துக்கு 500 ரூபாய் கொடுத்து ஒரு குடும்பத்திற்கு தண்ணீர் விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது மாதம் 3000 ரூபாய் செலவு ஆகுகிறது ஆனால் இதற்குத் தீர்வு கிடைக்காமல் நாங்கள் தவிர்த்து வருகிறோம் இந்த பஞ்சாயத்தில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கூலி வேலைக்கு கடல் தொழிலுக்கும் செல்லக்கூடிய மக்கள் தான் உள்ளனர் இதுவரை எங்கள் பஞ்சாயத்தில் வந்து மக்களிடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சருமான மதன் ராஜா எந்த குறைகளும் வந்து கேட்கவில்லை. அதுபோல இந்த பஞ்சாயத்தில் வாழ்வு ஆபரேட்டர் ஆள் பற்றாக்குறை உள்ளது அதுபோல ஏற்கனவே பணியாற்றக் கூடியவர் பாதி நேரம் குடிபோதையில் தான் இருக்கிறார் இங்கு உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் இருந்து வீணாக குடிநீர் செல்கிறது என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து மக்கள் 15 ரூபாய் கொடுத்து ஒரு குடம் தண்ணீர் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது ஆனால்ர இதனை கண்டு கொள்ளாமலேயே தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மதன் ராஜா செயல் பட்டு வருகிறார் என்ற ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது மாற்றம் வேண்டும் மாற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் வாக்களித்தோம் ஆனால் எங்கள் நம்பிக்கை எல்லாமே தற்போது சிதைந்து விட்டது என்று பெண்கள் வெளிப்படையாகவே தமிழக அரசு மீது குற்றம் சுமத்தும் சூழ்நிலையும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீது கடும் அதிருப்தியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு குடம் தண்ணீர் 13 ரூபாய் பொதுமக்கள் வாங்கும் அவல நிலைமை.