தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் பிரதான ஓடையான பக்கிள் ஓடையின் முகத்துவாரத்தை தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டு அதன் பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுகளிலும் சுமாா் 2000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்கள் 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் எல்லா தெருக்களுக்கும் சென்று வீடுகளில் தேவையற்ற கழிவு பொருட்களை நேரடியாக சேகாித்து வருகின்றனா். தினசாி 180 டன் வரை வருகிறது. அதை அருகிலுள்ள குப்பை கிடங்கு மையத்தை மக்கும் குப்பைகளை உரம் தயாரிப்பதற்கு எடுத்துச்சென்று மற்றும் மக்காத குப்பைகளாக தற்போது 3 வகையான பிளாஸ்டிக் தொழில்நுட்ப எலக்ட்ராணிக் கழிவுகள் மருத்துவ துறை கழிவுகள் உள்ளிட்டவைகள் தருவைகுளம் குப்பை கிடங்கிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. மாநகராட்சிபகுதியில் தூய்மையை முழுமையாக கடைபிடித்து வருகின்றோம். எந்த ேதவையற்ற பொருட்களாக இருந்தாலும் கழிவு நீர் கால்வாய் வழித்தடம் பக்கிள் ஓடைகளில் போட வேண்டாம் நேரடியாக வரும் தூய்மை பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என்று தொடா்ந்து மாநகராட்சி மக்களுக்கு தகவல்களை தொிவித்து வருகிறோம் இருப்பினும் ஓரு சிலா் செய்கின்ற தவறுகளால் கழிவு நீர் வழித்தடங்களில் நீரோட்டத்தின் போது அடைப்புகளில் இதன் கழிவுகள் நின்று கொண்டிருக்கும் போது கழிநீர் நீரோட்டம் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதை தவிா்ப்பதற்கு பொதுமக்கள் முழுமையாக ஓத்துழைக்க வேண்டும் பக்கிள் ஓடை மற்றும் அதன் இணைப்புகழிவுநீா் வழித்தடங்களின் இணைப்பு மூலம் திரேஸ்புரம் கடற்கரை முகப்பு பகுதியில் பல்வேறு கழிவுகள் தேங்கும் நிலை சில சமயங்களில் வரக்கூடும் அந்த கழிவுகள் கடலுக்குள் செல்லும் போது மீன் உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமின்றி கடல்வளமும் பாதிப்புக்கு உள்ளாகும் இதை கருத்தில் கொண்டு 3 மாதத்திற்கு ஓரு முறை முழுமையாக தேவையற்ற கழிவுகளின் தேக்கத்தை அகற்றும் பணியும் நீரோட்டம் விரைவாக கடலுக்கு செல்லும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் மாநகராட்சி பகுதி முழுவதும் உள்ள கழிவு நீர் வழித்தடங்களில் மண்ணெடுத்தல் மற்றும் முறைப்படுத்தி அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம். மழையின் தாக்கம் எந்த வகையில் எப்படி இருந்தாலும் பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் முழுமையாக பணிகளை செய்து வருகிறோம். இதே போல் எல்லா வாா்டுபகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திமுகவினா் மற்றும் அனைத்து தரப்பினா் கூறும் குறைகளையும் கேட்டறிந்து நிவா்த்தி செய்து வருகிறோம் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. என்று கூறினாா்.
ஆய்வின் போது மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், சுகாதர குழு தலைவர் சுரேஷ்குமாா் முன்னாள் கவுன்சிலா் ரவிந்திரன், பகுதி அணி அமைப்பாளா் எமல்டன், வட்டப்பிரதிநிதி மாா்ஷல், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.
பருவமழையை எதிா்காௌ்ள தூத்துக்குடி மாநகராட்சி தயாராக வுள்ளது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்