தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் 2013ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுள்ளோம் 2024 நியமனத் தேர்வு வைத்தார்கள் அதில் நாங்கள் வெற்றி பெற்றோம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதையும் மீறி தற்காலிக ஆசிரியர் 20000 பேர் பணியாற்றி வருகிறார்கள். நாங்கள் தனியார் பள்ளிக்கு ஆசிரியர் பணிக்கு சென்றால் 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் தான் கொடுக்கிறார்கள் அதை வைத்து நாங்கள் குடும்பம் நடத்த முடியாது ஆசிரியர் தேர்வு படித்து வெற்றி பெற்றவர்கள் பல்வேறு சாதாரண வேலைக்கு செல்கிறார்கள். ஆசிரியர் தேர்வு படித்தவர்கள் 100 நாள் வேலைக்கு கூட செல்கிறார்கள் 2013ம் ஆண்டு முதல் நாங்கள் தொடர்ந்து தேர்வு எழுதி வருகிறோம் வெற்றி பெறுகிறோம் எங்களுக்கு பணி வழங்கவில்லை நாங்கள் இதுவரை மனு அளித்ததற்கு மனு பெற்றுக்கொண்டோம் நிராகரிக்கப்பட்டோம் என்று தான் பதில் வருகிறது தவிர தீர்வு கிடைக்கவில்லை. தயவு செய்து விஜய் அண்ணா உங்களை நம்பித்தான் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம் எங்களை தங்கையாக நினைத்து எங்களுக்கு நல்ல தீர்வு காண வேண்டும் 21 ஆயிரத்து 515 நியமன தேர்வு எழுதி பணிக்காக காத்திருக்கிறார்கள் என் ஆசிரியர்கள் தான் அதிகமாக தேர்வு எழுதி இருக்கிறார்கள். வயது அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும் நிறைய ஆசிரியர்களுக்கு 45 வயது ஆகிவிட்டது அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் வேதனையுடன் கூறினாா்கள்.
விஜய் அண்ணா உங்களை நம்பித்தான் வாக்களித்தோம் இடைநிலை ஆசிரியர்கள் வேதனை