Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மதுரை பந்தல்குடி கால்வாயை உடனடியாகத் தூர்வாரி வெள்ள அபாயத்தைத் தடுக்க வேண்டும் – சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

Last updated: July 17, 2026 11:57 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மதுரை மாநகரின் முக்கிய நீர்வழித்தடங்களில் ஒன்றான பந்தல்குடி கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், கட்டடக் கழிவுகள் மற்றும் செடிகள் அதிகளவில் தேங்கியுள்ளன. மழைக்காலம் நெருங்கி வரும் சூழலில், கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றத் தவறினால், மழைநீர் தடையின்றி வெளியேற முடியாமல் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை, உடைமைகள் மற்றும் சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும். எனவே, பந்தல்குடி கால்வாயின் தற்போதைய நிலை குறித்து மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உடனடியாக நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கால்வாய் முழுவதும் தேங்கியுள்ள குப்பைகள், கட்டடக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், செடிகள் மற்றும் நீரோட்டத்தைத் தடுக்கும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, தூர்வாரும் பணிகளை எவ்வித காலதாமதமும் இன்றி தொடங்க வேண்டும் தூர்வாரும் பணிகள் பெயரளவிற்காகவோ அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மேற்கொள்ளப்படுவதாகவோ இருக்கக் கூடாது. கால்வாயின் தொடக்கப் பகுதியிலிருந்து இறுதிப் பகுதி வரை மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் முழுமையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தூர்வாரப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் மீண்டும் கால்வாயின் கரையோரங்களில் கொட்டப்படாமல், உரிய இடங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் புகார்கள், கருத்துகள் மற்றும் வெள்ள அபாயம் தொடர்பான எச்சரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வெள்ள அபாயம் அதிகமுள்ள பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, மழைநீரை வெளியேற்றும் மோட்டார்கள், அவசரகால மீட்புக் குழுக்கள், தற்காலிக நிவாரண மையங்கள், குடிநீர் மற்றும் மருத்துவ உதவி வசதிகள் ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், கால்வாயில் குப்பைகள், கழிவுநீர் மற்றும் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுப்பதற்காகத் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். விதிகளை மீறிக் கழிவுகளைக் கொட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி அபராதம் விதிப்பதுடன், சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். தேவையான இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, குப்பைகள் கொட்டத் தடை விதிக்கும் எச்சரிக்கைப் பலகைகளும் அமைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் முன்வைக்கும் புகார்களையும் வெள்ள அபாய எச்சரிக்கைகளையும் அலட்சியப்படுத்தாமல், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பந்தல்குடி கால்வாயை முழுமையாகத் தூர்வார வேண்டும். வெள்ளம், தொற்றுநோய்கள் மற்றும் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான உடனடி மற்றும் நிரந்தரத் தீர்வுகளை மதுரை மாநகராட்சியும் தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர்
Next Article மூன்றரை மணி நேரம் காத்திருந்து… காத்திருந்து போனதுதான், அமைச்சர் ஸ்ரீநாத்துக்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காத்திருந்த அவல நிலைமை.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதையொட்டி எடப்பாடி பழனிசாமியிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சந்தித்து வாழ்த்து.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஸ்டாலின் ஆட்சியில் தான் பெண்கள் துணிந்து புகார் கொடுக்க வந்தனர் ஆனால் இன்று தவெக ஆட்சியில் பாதிக்ப்பட்ட பெண்ணுக்கு நடந்த பாலியல் சம்பவத்திற்கு குரல் கொடுக்க மறுக்கின்றனர் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றம் சாட்டினார்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அமைச்சர் ஸ்ரீநாத்க்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி வாழ்த்து

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு.. யூடியூபர் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?