தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெறும் நிகழ்ச்சி மீன்வளத்துறை அமைச்சர் சிறுநாத் அறிவித்திருந்தார் அதன்படி வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி என தெரிவிக்கப்பட்டு இருந்தது இதனை அடுத்து தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குறிப்பாக வயதானவர்கள் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தங்களது கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களுடன் காலை 8 மணி முதல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வந்து இருந்தனர் ஆனால் காலை 8 மணி முதல் 11.30 மணி வரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அமைச்சர் ஸ்ரீநாத் வரவில்லை இதனால் வயதானவர்கள் மிகவும் சோர்வாகவே காணப்பட்டனர் இதனால் அங்கு கூடியிருந்த பலரும் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதய்யா என்று நகைச்சுவையான வசனத்தை பேசிக்கொண்டிருந்தனர் இது பற்றி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உள்ள பணியாளர் யாரும் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை 11:40 மணியளவில் அமைச்சர் ஸ்ரீநாத் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருகை தந்தார் அங்கு இருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் இதில் வேடிக்கை என்னவென்றால் வயதான பெண்களிடம் அமைச்சர் ஸ்ரீநாத் மனுக்களை பெற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் டோன்ட் ஒரி டோன்ட் டோரி ஐ டோன்ட் ஒரி என்று ஆங்கிலத்தில் மாறி மாறி வயதான பெண்களிடம் அவர் கூறினார் அமைச்சர் ஸ்ரீநாத் என்ன கூறுகிறார் என்று தெரியாமலேயே மனுக்கள் கொடுத்துவிட்டு சென்றனர் அமைச்சருடைய சுற்றுப்பயண விபரத்தில் காலை 8 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெறுவார் என்று அறிவித்துவிட்டு 3:30 மணி நேரம் கழித்து வந்தது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது
மூன்றரை மணி நேரம் காத்திருந்து… காத்திருந்து போனதுதான், அமைச்சர் ஸ்ரீநாத்துக்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காத்திருந்த அவல நிலைமை.