தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3வது மைல், அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட ஆவின் பாலகம் –ப்ரண்ட்ஸ் காபி கபே திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ரிப்பன் வெட்டி ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் ஆவின் பொருட்களின் விற்பனையை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக இருதய நண்பர்கள் சார்பில் சிறப்பு ஜெபம் நடைபெற்றது.
விழாவில் மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், ஆல்கன் டிரஸ்ட் நிறுவனர் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் மாவட்ட பிரதிநிதி நாராயணன், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் மருதப்பெருமாள், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் செல்வகுமரன், வட்டச்செயலாளா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட், நிர்வாகிகள், அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும், பொதுமக்களும் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த ஆவின் பாலகம், பொதுமக்களுக்கு தரமான ஆவின் பொருட்கள் அனைத்தும் கிைடக்கும் வகையில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது