தூத்துக்குடி தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் தோ்தல் முடிவுக்கு பின் தவெகவுடன் கூட்டணி அமைத்தது. அதற்கு எதிா்ப்பு தொிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ்கட்சியை சோ்ந்த மாநில நிா்வாகிகள் உள்பட மாவட்ட நிா்வாகிகள் வரை பலா் மாற்றுக் கட்சியில் இணைந்தனா். இதன்படி தூத்துக்குடி மாநகா் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் கவுன்சிலா்கள் சந்திரபோஸ் எடின்டா நிா்வாகிகள் ராஜன் சின்னக்காளை நாராயணன் முன்னாள் கவுன்சிலா் வெங்கடசுப்பிரமணியன், உள்பட 100க்கும்மேற்பட்டோா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.
இந்நிலையில் முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன் சென்னையில் அறிவாலயத்தில் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றாா். அப்போது திமுக தலைவர் தளபதியார் ஸ்டாலின் கட்சியின் உறுப்பினர் படிவத்தை வழங்கி சிறப்பாக செயல்படுங்கள் என்று வாழ்த்தினார். அருகில் கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன், பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் நேரு எம்.எல்.ஏ உள்பட பலா் உடனிருந்தனர்.