தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஷிபானா தலைமை தாங்கினாா். கல்லூரி துணை முதல்வர் முனைவர் எழிலரசி, சுயநிதிப்பிரிவு இயக்குனர் முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ், தேர்வுக்கட்டுப்பாட்டு ஆணையர் ரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நாகா்கோவில் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் முனைவர் சகாய செல்வி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். மாணவர் பேரவை உறுப்பினரான வேதியியல் துறைப்பேராசிரியருமான முனைவர். பர்வீன் சுல்தானா வரவேற்புரை வழங்கினார்.
விழாவில் வரலாற்றுத்துறை பேரவைத் தலைவி பிரியதர்ஷினி, கணிதவியல் துறை– பேரவை செயலர் கேத்தரின் லியோ, வணிகவியல்துறை பேரவை துணைத்தலைவர் பிரின்ஸி ஸ்னோஸ்லின், சுயநிதிப்பிரிவு வணிகவியல்துறை பேரவைத் தலைவி பொன் செல்வி, வணிக மேலாண்மை துறை பேரவை செயலாளர் லியாண்ட்ரா ஃபேனி டா, உளவியல் துறை பேரவை துணைத்தலைவர் அனுஷ்யா ஆகியோா் பேரவை நிர்வாகிகளாக கல்லூரி முதல்வர் நியமனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த வகுப்பு தலைவிகள், கல்லூரி சார்பில் நடத்தப்படும் கலை மன்றங்கள் மற்றும் சமூகம் சார்ந்த சங்கங்களின் தலைவிகள் கல்லூரிக்காக தொடர்ந்து சேவை செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர்.
பின்னா் “விசுவாசத்தில் முயற்சி செய்யுங்கள்” எனும் கருத்தாக்கத்தைக் மையமாகக்கொண்டு “ நம்பிக்கையின் சிறகுகள்” எனும் பொருண்மையில் மாணவியர் நிலைக்காட்சி நடைபெற்றது. மாணவர் பேரவை உறுப்பினரான துறைப் பேராசிரியருமான முத்து கலைவாணி நன்றியுரை வழங்கினார்