தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது இதில் பாதிக்கும் மேற்பட்ட வாா்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து விட்டது தற்போது வார்டு 16. 17. 18. 49. 50 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியான பிஎன்டி காலனி. கதிர்வேல்நகர். சிவஜோதி நகர். வேலவன் நகர். அசோக் நகர். ராஜீ நகர். பாரதி நகர். புஷ்பா நகர். நிகிலேசன் நகர். கோக்கூர். பால்பாண்டி நகர். ஜெல்சீனி காலனி. அமுதாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது இந்த பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் வார்டுகளுக்கு சென்று பணிகளை பார்வையிட்டார் அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டு அறிந்து மேயர் ஜெகன் பொயசாமி கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சிபகுதியில் பாதாள சாக்கடை பணிகள் தற்போது 16 முதல் 18 வார்டுகளும் 49 மற்றும் 50 வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது பொதுமக்கள் எந்த விதமான அவசரம் காட்டாமல் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பொதுமக்கள் இணைப்புகளை கொடுக்க வேண்டாம் இரண்டு மாதத்தில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து விடும் அதன் பின்பு பொதுமக்கள் பாதாள சாக்கடையில் இணைப்பு கொடுத்துக் கொள்ள வேண்டும் நீங்கள் இணைப்பு கொடுப்பதால் பணிகள் பாதிக்கப்படுகிறது என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பிறகு மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சிக்கு புதியதாக பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்வதற்கு சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய வாகனம் வாங்கப்பட்டுள்ளது இந்த வாகனத்தை மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் மேயர் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தார் இந்த வாகனத்தில் 120 மீட்டர் நீளத்திற்கு பைப்பு அமைக்கப்பட்டுள்ளது நவீன கம்பரசர் வசதிகளுடன் எவ்வளவு பெரிய அடைப்புகள் இருந்தாலும் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பைப் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்
நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாாிய நிா்வாக பொறியாளா் ஆனந்தி, உதவி நிா்வாக பொறியாளர் வான்மதி, கவுன்சிலா்கள் சந்திரபோஸ். இசக்கிராஜா கண்ணன், கனகராஜ், முத்துவேல், பகுதி செயலாளர் ரவீந்திரன். வட்டச்செயலாளர் சுரேஷ் பொன்பெருமாள் போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர். ஜேஸ்பர். மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.