தூத்துக்குடி தமிழக வெற்றி கழக மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழக மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் எரிசக்திதுறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார் அரசியல் கட்சி பொதுக் கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவே மாட்டார்கள் இதுதான் நடைமுறையில் இருந்தது அரசியல் கட்சி பொதுக்கூட்டம் என்றால் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் கலந்து கொள்வது நடைமுறை. இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்த எந்த ஒரு அரசியல் கட்சியின் கட்சி பொதுக் கூட்டத்தில் எந்த துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டது கிடையாது.
இந்நிலையில் எரிசக்தி துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்ட தமிழக வெற்றிக்கழக கட்சி பொதுக் கூட்டத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பாக எக்ஸியூட்டி இன்ஜினியர் டவுன் மற்றும் ரூரல் அதிகாரிகள் தங்களுக்கு அரசு ஒதுக்கப்பட்டுள்ள காரில் அமர்ந்திருந்தனர் ஒரு சில அதிகாரிகள் மேடையின் முன்புறம் நின்று கொண்டிருந்தனர் அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்தில் முதன்முறையாக மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டது ஏன் என்ற கேள்வி தற்போது அரசியல் aவட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசு விழாக்களில் கலந்து கொள்வது வழக்கமான நடைமுறை தற்போது கட்சியின் பொதுக்கூட்டத்தில் அதிகாாிகள் கலந்து கொண்டிருப்பது தமிழகத்தில் மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு நல்லமாற்றத்தை அரசியல் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறித்து முதல்வா் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.