தூத்துக்குடி வடகால் பாசன விவசாயிகளுக்கு பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் சங்கம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் போதும் அரசு அதிகாரிகள் தண்ணீர் தரப்படும் விவசாயத்துக்கு தண்ணீர் தரப்படும் என்று கூறி போராட்டத்தின் போது தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் விவசாய சங்கத்தின் சார்பில் கூட்டம் புளியில் விவசாயிகள் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயத்திற்கு காலவரையற்ற உண்ணாவிரதம் புதன்கிழமை காலை மேற்கொண்டனர். காலவரற்ற விவசாயிகளின் உண்ணாவிரதத்தை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர் பரபரப்பு நிலவியது பதட்டம் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் வாருங்கள் என்று கூறி ரூரல் டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயிகளை பாரபட்சம் என்று மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்து கொண்டனர் இது பற்றி சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி கண்ணன் செய்தியாளரிடம் கூறுகையில் விவசாயிகளுக்காக நீர் இல்லை தண்ணீர் இல்லை ஸ்பிக் நிறுவனத்திற்கு தண்ணீர் செல்கிறது விவசாய நிலத்துக்கு கண்ணீர் வழங்காமல் உள்ளனர். விவசாயிகள் சங்கம் தொடர்ந்து ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர் விவசாய சங்க மாவட்ட தலைவராக இருக்கக்கூடிய சீனிவாசன் இந்தப் போராட்டத்தில் போராடிய போது பேச்சு வார்த்தை என்கிற பெயரில் டிஎஸ்பி தலைமையில் இருந்த காவல்துறையினர் எந்தவிதமான முன்னறிவிப்பு என்று பேசிக் கொண்டிருக்கும்போதே போலீஸ் பட்டாளத்தை வைத்து சீனிவாசனை கைய பிடித்து இழுத்து 85 வயது ஆகிறது கையைப் பிடித்து இழுத்தால் கை தனியாக வந்து விடும் என்று நான் கூறினேன் அவர் மனதிடத்தோடு விவசாயிகளுக்காக போராடுகிறார் அவர் சாகும் வரை போராட்டம் இருக்க தயாராக இருக்கிறார் சிறுவைகுண்டம் அணையில் தண்ணீர் இருந்தும் தண்ணீர் திறக்கவில்லை வாழை பயிர்கள் எல்லாம் தற்போது அழிந்து உள்ளது தண்ணீர் திறந்து இருந்தால் வாழைகள் எல்லாம் வாழ்ந்திருக்கும் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். நீர் மேலாண்மையை கையாளாகாத காரணத்தினால் தான் தற்போது விவசாய நிலம் முழுவதும் அழிந்து உள்ளது ஸ்பிக் நிறுவனத்திற்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சீனிவாசனை தரதரவென்று காவல்துறையினர் இழுத்துச் சென்ற போது அவருடைய பைகீழே விழுந்தது பையை கூட எடுக்க விடாமல் தரதரவென்று சீனிவாசன் இழுத்துச் சென்றனர் அதுபோல விவசாய சங்க செயலாளர் புவி ராஜாவை சட்டையை பிடித்து இழுத்தனர் இதனை நான் வீடியோ எடுத்து காவல்துறையினர் என்னை மிரட்டி கைது செய்ய முயன்றனர் நான் சரி என்று ஆனால் எனது செல்போனை புடுங்கி போலீஸ் நடந்து கொண்ட விதத்தை வீடியோ எடுத்த முழுவதும் செல்போனில் அழித்து விட்டனர் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்தனர் காவல்துறை அராஜகம் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை ஆனால் கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் காவல்துறை மிகவும் கொடுமையாகவே நடந்து கொள்கிறது. காலவரற்ற உண்ணாவிரதத்தில் எந்த ஒரு வன்முறையும் இல்லை ஒதுக்கு புறமான ஒரு இடத்தில் தான் காலவரற்ற உண்ணாவிரதம் நடைபெற்றது காவல்துறையினர் நடந்து கொண்டதை வீடியோ எடுத்ததை காவல்துறையினர் எனது செல்போனை பிடுங்கி எப்படி முழுவதும் அளிக்கலாம் இது காவல்துறை அராஜகத்தில் ஈடுபட்டது சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என்று போக்குவரத்து சங்கத்தைச் சேர்ந்த கண்ணன் கூறினார்
காவல்துறை அராஜகம். சி ஐ டி யு கடும் கண்டனம்