தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியால் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட ஜெ பேரவை செயலாளா் விஜயகுமார், பகுதிச் செயலாளர்கள் முருகன், சுடலைமணி, ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ் நாராயணன், குணசேகரன், அப்பாதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்கள் பிரபாகர், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ் பாபு, சுந்தர், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்டக் கலை பிரிவு செயலாளர் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிகண்டன், சொக்கலிங்கம், நிர்வாகிகள் சுடலை, பிராங்கிளின் ஜோஸ், செல்வராஜ், ராஜதுரை, வீரமந்திரகுமார், ஆறுமுகம், ஆனந்தன், சரவணவேல், தங்கதுரை, ராஜசேகர், நாராயணன், பிரேம், ராஜ், ஏசுதாஸ், முருகேசன், சந்தனராஜ், பாலஜெயம், சாம்ராஜ், ஆனந்த், அக்ஷய்லிங்கம், உள்பட பலர் உடனிருந்தனர்.