திருச்செந்தூர் நாடார் உறவின்முறை முன்னேற்ற சங்கத்தின் 31 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கல்வி பரிசளிப்பு விழா தனியாா் திருமண மஹாலில் தலைவர் செந்தில்குமார் தலைமையில், பொதுச் செயலாளர் பாரதிசுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது. செயலாளர் பழனிஈஸ்வரன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை நாடார் மகாஜன சங்க தலைவர் கரிக்கோல்ராஜ் நாடார், தமிழ்நாடு வணிகர்களின் சங்க பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி நாடார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் ஒருங்கிணைப்பாளர் கோடீஸ்வரன், அதிமுக மாவட்ட ஜெ பேரவை துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, அதிமுக ஒன்றிய செயலாளர் மனோகரன், திமுக முன்னாள் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சுரேஷ், சோடாரவி, துணைத் தலைவர்கள் மகேந்திரன், பால்வண்ணன், செல்வகுமார், இணைச் செயலாளர்கள் ராஜ்குமார், பாலகுமார் சுரேஷ், சீனிவாசன், ராவணன் ராமசாமி மற்றும் நாடார் சமூக அனைத்து ஊர் தலைவர்களும், பொதுமக்களும், பெண்களும், உள்பட பலா் கலந்து கொண்டனர்.
விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. விழா நிறைவில் பொருளாளர் ராஜேஷ்குமார் நன்றி உரையாற்றினார்.