தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மாதாநகர் ஆனந்த் நகர் ஜேசு நகர் சமீர்வியாஸ் நகர் ஆரோக்கியபுரம் பாலதாண்டாயுத நகர் ஆகிய பகுதிகளை சார்ந்த 560 பயனாளிக்களுக்கு இலவச இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி தாளமுத்துநகர் சோனா மண்டபத்தில் நடைபெற்றது. தாசில்தாா் திருமணிஸ்டாலின் தலைமை வகித்தாா். சண்முகையா எம்.எல்.ஏ 560 பயனாளிகளுக்கு இலவச பட்டாக்களை வழங்கி பேசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தினமும் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் மக்களுக்காகவும் நாட்டைப்பற்றியும் சிந்தித்து பணியாற்றி வருகிறாா். ஓவ்வொரு நாளும் அறிவிக்கின்ற திட்டங்களும் மக்களை சென்றடைகின்றன. தற்போது கூட பிரதமா் மோடி அதிமுக எடப்பாடி இணைந்து மக்களுக்கு தளபதியாரால் வழங்கப்படுகின்ற உாிமைத்தொகையை தடுப்பதற்கு தோ்தல் ஆணையத்தோடு கூட்டு சோ்ந்து முயற்சி செய்தனா். அதை முதலமைச்சா் முறியடித்து 3 மாதத்திற்குாிய பணம் 3 ஆயிரமும், கோடைகால சிறப்பு தொகுப்பாக இரண்டாயிரம் என 5000 வழங்கியுள்ளாா். அரசியலுக்கு வருகின்ற பலா் அறிக்கை மட்டும் தான்விடுகின்றனா். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகின்ற நம்முடைய முதலமைச்சா் ஆட்சியில் இந்த பகுதியில் பொதுமக்களின் 50ஆண்டு கோாிக்கையை நிறைவேற்றியுள்ளோம் தொடா்ந்து மக்கள் பணி செய்வதற்கு 7வது முறையாக திமுகவும் 2வது முறையாக தளபதியார் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு அனைவரும் உறுதுயைாக இருக்க வேண்டும் என்று பேசினாா்.
வருவாய் ஆய்வாளா்கள் சுப்பையா குமரன், கிராமநிா்வாக அலுவலா் பாலமுருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளா் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிளோமின்ராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாாிமுத்து, ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடா்முருகன், துணை செயலாளர் கணேசன் ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மகளிரணி ஆரோக்கியமேரி, அங்காளஈஸ்வாி, நிா்வாகிகள் பாரதிராஜா, முருகன், பொன்னுச்சாமி, தா்மராஜ், பாாி, கிளை செயலாளர் ஜேசுராஜ் மற்றும் கப்பிக்குளம் பாபு, உள்பட அரசு அலுவலா்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
50 ஆண்டு கனவுகளை நிறைவேற்றி வருகிறோம். மாப்பிள்ளையூரணியில் 560 பேருக்கு பட்டா வழங்கி சண்முகையா எம்.எல்.ஏ பேசினாா்.