தூத்துக்குடி கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டா் இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திபட்டா, கலைஞரின் கனவுஇல்லம் திட்டத்தின் கீழ்வீடுவேண்டி, தொழில்கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 437கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதுஉரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறுதுறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டா் அறிவுறுத்தினாா். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 96 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். பத்திாிகையாளா் கோாிக்கை கேட்டறியப்பட்டு நிறைவேற்றப்படாமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தேசிய அறக்கட்டளை மூலம் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு, பாதுகாவலராக நியமிக்கப்பட்ட 5 நபர்களுக்கு 1 வருடகாலத்திற்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் சான்றிதழ்களையும், மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு தலாரூ. 5479/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், 02 பயனாளிகளுக்கு தலாரூ. 4720/- மதிப்பிலான இலவச தேய்ப்புபெட்டிகள் என மொத்தம் 07 பயனாளிகளுக்கு ரூ. 36,835/- மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் செந்தில்வேல்முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) உலகநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி கலெக்டா் இளம்பகவத் தலைமையில் 437கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.