தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழக சாா்பில் முன்னாள் தேசிய குழு உறுப்பினா் பேராசிாியா் பாத்திமா, தலைவா் செல்வராஜ், செயலாளா் ராஜா, பொருளாளா் சம்சுதீன், ஆகியாோ் கூட்டாக வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழ்நாடு கடந்த 2018 மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக 13+2 பேரை சுட்டுப் படுகொலை செய்தது நம் அனைவரும் அறிந்ததே. இன்றைய தமிழக முதல்வர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு தூத்துக்குடி மக்களோடு இந்தத் துயரத்தில் பங்கேற்றார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இரவோடு இரவாக சந்தித்து என்றும் தூத்துக்குடி மக்களோடு இருப்பேன் என்று உறுதி கொடுத்தார். இதையும் நாம் அனைவரும் அறிவோம். தற்போது விஜய் தமிழ்நாடு முதல்வராக வந்து அமர்ந்து 100 நாட்களில் தூத்துக்குடி மக்களின் வேண்டுகோளான அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, உயர்நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது என்று பதில் கொடுத்துள்ளார். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் உள்ளது. உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை செய்த ஒரு நபர் ஆணையமான நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களுடைய பரிந்துரையை தமிழக அரசு நிறைவேற்றுமா? அல்லது தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை மிகத் தெளிவாக விளக்க வேண்டும் என்று கோருகிறோம். தற்போது நடந்து வரும் சட்டசபை கூட்டத் தொடரில் வரவிருக்கும் காவல்துறை மானியக் கோரிக்கையில் தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பான துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீதான நடவடிக்கையை உறுதி செய்யும் விதமாக அறிவிப்பு கொடுத்திட வேண்டும். மக்களுக்கான அரசாக மக்களோடு நின்று உயர்நீதிமன்றத்திலும் முறையான குற்ற நடவடிக்கை எடுக்கும் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பாக இவ்வேண்டுகோளை முன்வைக்கின்றோம். மேலும் 2018-ல் நடந்த படுகொலைக்குப் பிறகு தூத்துக்குடி மக்கள் இந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது என்று நிம்மதி அடைந்திருந்தோம். இந்நிலையில் தற்போது தமிழக அரசு செய்துள்ள இந்த இரட்டை நிலைப்பாட்டிற்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளனா்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் அதிகாாிகள் மீது நடவடிக்கை குறித்து முதல்வா் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கோாிக்கை