தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவி ஏற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தருவை குளத்தில் உள்ள உரக்கிடங்கில் வனத்துறை அதிகாரிகள் முதல் அனைத்து துறை அதிகாரிகளும் இங்கு மரம் வைத்தால் வளராது என்று உறுதியளித்த பின்பும் அதை சவாலாக ஏற்றுக்கொண்டு 3லட்சத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை தருவைகுளம் உரக்கிடங்கில் நடப்பட்டது. அந்த சாதனையை மேயர் ஜெகன் பொியசாமி நிகழ்த்தியுள்ளாா். தற்போது தருவைகுளம் உரக்கிடங்கு பசுமை காடாக மாறி உள்ளது இதனை பொதுமக்களுக்கும் வருங்கால சன்னதியினருக்கும் தெரிய வேண்டுமென்ற எண்ணத்தில் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் தருவைகுளம் உரக்கிடங்கில் மரம் எப்படி வளர்க்கப்பட்டு பசுமை காடாக மாறியது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பணிகளையும் மேயர் ஜெகன் பொியசாமி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் மாநகருக்குள் மையவாடி உள்ளது. இந்த மைய வாடி ஆரம்ப காலத்தில் எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் இருந்தது மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி 2022ம் ஆண்டு 12 மையவாடிக்கு பதினோரு சாலைகள் உள்ளது இந்த சாலைகள் எல்லாம் போடப்பட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 12 மையவாடி செல்லும் 11 வழித்தடத்திலும் இருபுறமும் மரங்கள் நடப்பட்டு மழைக்காலத்தில் மழை நீர் தேங்காதவாறு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு சுடுகாடு இனி பசுமை காடாக மாற்றுவதற்கான பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அதிகாலையில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
ஒரு சில தினங்களில் இருபுறமும் மரம் நடுவதற்கான பணிகளும் துவங்கப்படுகிறது முதலில் தருவைகுளம் உரக்கிடங்கை பசுமை காடாக மாற்றி சாதனை படைத்துள்ளதை போல் தற்போது 12 மையவாடி செல்லும் 11 வழித்தடத்தில் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை சுடுகாடாக மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
ஆய்வின்போது சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், திமுக பகுதி செயலாளா் ரவீந்திரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டி திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.