தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் அபராதம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து உடனடியாக அழிக்கும் பணியானது தூத்துக்குடி மாநகராட்சி பொதுச் சுகாதார பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் திடீர் ஆய்வின் போது 60 கிலோ அளவிலான தீங்கு விளைவிக்கக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டு தொடர்புடைய கடைகளுக்கு ரூ. 2600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1510 கிலோ எடை கொண்ட ரூபாய் 2.00 லட்சம் சந்தை மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அபராதமாக ரூபாய் 70,000 வசூலிக்கப்பட்டுள்ளது. இப்பணியானது மாநகரமெங்கும் தொடர்ச்சியாக நடைபெற உள்ளதால் தீங்கு விளைவிக்கக் கூடிய பிளாஸ்டிக் பொருட பொருட்களின் உபயோகத்தை முற்றிலுமாக தவிர்த்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் தீங்கு விளைவிக்க கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கள ஆய்வின் போது கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் அபராதம்