தூத்துக்குடி வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டு படு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனைத்தை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹானூரில் உள்ள மரிமங்கலத்தில் வசித்து வரும் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூன்று பேரும் அவர்களது மாட்டை காணவில்லை என்று வன பகுதியில் தேடி பார்த்து வந்த நிலையில் இரவு நேரமாக ஆனதால் அவர்கள் எங்கே உறங்கி கொண்டிருந்த போது வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனா். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மூவரும் வேட்டையில் ஈடுபட்டதாகவும் வனத்துறை அலுவலர்களை தாக்கியதாகவும் அவர்களிடம் துப்பாக்கி மற்றும் மான் இறைச்சி மீட்கப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த மூன்று பேர் மீது இது மாதிரியான பழியை போட்டு சட்டத்திலிருந்து தப்பி விடாலாம் என்கிற முயற்சியில் வனத்துறையினர். ஏனென்றால் உயிரிழந்த மூன்று பேரும் வனத்துறையினர் சொல்வது போல் இந்த தவறு செய்திருந்தால் அவர்களை பிடித்து சட்டத்திற்கு முன் ஒப்படைக்க வேண்டுமே தவிர அதை விட்டுட்டு சூட்டு கொள்வதற்கு வனத்துறையினருக்கு யாரு கொடுத்தது இந்த அதிகாரம். எனவே உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 50 லட்சமும் அவர்களின் குழந்தைகளின் கல்வி போன்ற எதிர்காள அனைத்து செலவுகளையும் கர்நாடகா அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் தமிழர்கள் மூன்று பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் சம்பந்த பட்ட வனத்துறையினரிடம் முழுமையான விசாரணையை மேற்கொண்டு வழக்கு பதிந்து கைது செய்வதுடன் நிரந்தர பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.