தூத்துக்குடி தாளமுத்துநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை அருகில் இருந்து பாதயாத்திரை பிரச்சாரப் பயணம் மாநகர செயலாளரும் கவுன்சிலருமான தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கரும்பன் சிறப்புரையாற்றி பாதயாத்திரை பயணத்தை தொடங்கி வைத்தார். கிளைச் செயலாளர் அந்தோணி சௌந்தர்ராஜன் மாநில குழு உறுப்பினர் ஞானசேகர் மாநகரப் பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்து நடத்தினார்கள். பயனக்குழு தாளமுத்து நகர் சிலுவைப்பட்டி டேவிஸ்புரம் சவேரியார் புரம் பகுதிகளின் வழியே சென்றது. ஒவ்வொரு சந்திப்புக்களிலும் மாநகர துணை செயலாளர் மாடசாமி வழக்கறிஞர்கள் கணபதி சுப்ரமணியன் முத்துலட்சுமி மற்றும் தாமரைச்செல்வன் மனோன்மணி ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள். மாநகர குழு உதவி செயலாளர் ஜீவா மாநகரக் குழு உறுப்பினர்கள் ராமன் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பாதயாத்திரை பிரச்சாரப் பயணம் நடைபெற்றது.