தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் உள்ள பேன்சி கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த கதிர்வேல் நகரைச் சேர்ந்த சிவா என்பவர் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்துச் சென்று ஓடியதாகக் கூறப்படும் புன்னக்காயலைச் சேர்ந்த குமார் மகன் டார்வின் (23) என்ற இளைஞரை மத்திய பாகம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
.