தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீநாத்தை பொதுமக்கள் நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகள் மற்றும் அடிப்படை பிரச்சினைகளை தெரிவிக்க முடியாத நிலை இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறியும் நடைமுறை முற்றிலும் தவிர்க்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சரின் அலுவலகத்தை நாடிச் செல்லும் பொதுமக்கள் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுவதாகவும், தூத்துக்குடி மக்களின் நீண்டகால அடிப்படை பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் எவ்வித தீர்வும் காணப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகள் மற்றும் நீண்டகால பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து வலியுறுத்தியுள்ளார்