தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கம் முன்வைத்துள்ள மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடு தொடர்பான கோரிக்கை நியாயமானது. என்பதே சட்ட உரிமைகள் கழகத்தின் நிலைப்பாடு. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை அரசு உடனடியாக களைந்து, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கட்டணமில்லா சிகிச்சை, தடையில்லா மருத்துவமனை அனுமதி, புதிய காப்பீட்டு அட்டை மற்றும் முழுமையான சிகிச்சை பாதுகாப்பு கிடைக்க அரசாணை வெளியிட வேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் அரசு ஊழியர்கள் தங்களுக்கான மருத்துவ உரிமைக்காக கலெக்டர் அலுவலகம் முன் போராட வேண்டிய நிலை வருவது கவலைக்குரியது. அரசு இந்த கோரிக்கையை பரிசீலித்து, ஊழியர்களின் மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் காப்பீட்டு குறைபாடுகளை களைந்து, ஊழியர் நலனை உறுதி செய்யுங்கள் சட்ட உரிமைகள் கழக தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை