தூத்துக்குடி தமிழகத்தில் பள்ளி கல்வியில் படிக்க வேண்டும் என்று பலா் ஆா்வத்துடன் இருந்து வருகின்றனா். அவா்களுக்கு அரசின் சாா்பில் சில உதவிகள் செய்தாலும் மற்ற பல செயல்களுக்கு படிப்புக்கு தேவையான உதவிகள் தேவைப்படும் நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 44 வது வார்டு மக்கள் தளம் சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வழிகாட்டுதலின் படி 10 பேருக்கு கல்வி உதவித்தொகையாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் எலிசபெத் ராஜன் கல்வி நிதி வழங்கினார்.
விழாவில் மாநகர திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக் அப் தனபால், காங்கிரஸ் மண்டலத்தலைவர் நிா்மல் கிறிஸ்டோபா், முன்னாள் கவுன்சிலா் இசக்கிமுத்து, பகுதி பிரதிநிதி செந்தில்குமாா், மற்றும் ராஜன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.