தூத்துக்குடியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில், ஜெகன் பெரியசாமி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை வழங்க ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர் தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்சலின், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
குழந்தைகள் போலியோ நோயிலிருந்து முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அரசு சார்பில் இந்த சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்களது ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டன
ர்.