பெருந்தலைவர் காமராஜரை தரக்குறைவாக விமர்சனம் செய்த யூடியூபர் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி இன்று முத்தையாபுரம் பல்க் பஜாரில் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தை முத்தையாபுரம் நாடார் சங்கம் மற்றும் சுற்று வட்டார நாடார் சங்கங்கள், இயக்கங்கள் இணைந்து நடத்தினர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் நாடார், பனங்காட்டு மக்கள் கழகம் மாநில வழக்கறிஞரணி செயலாளர் சிலுவை நாடார், காமராஜர் லட்சிய பேரவை பிரசன்னா, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான பங்கேற்றனர் .
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் நாடார் பேசுகையில் : கர்மவீரர் காமராஜரை தகுதியற்றவர்கள் எல்லாம் தற்போது விமர்சனம் செய்து தங்களை விளம்பரப் படுத்திக் கொள்கிறார்கள் மனிதக் கடவுளாக வாழும் கர்மவீரரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுக எம்பி திருச்சி சிவா பெருந்தலைவரை இழிவாக பேசினார். இது குறித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் திமுக அரசு இதுவரை திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த தைரியத்தில் முக்தார் காமராஜரை இழிவாக பேசி உள்ளார். தவறு செய்தவர்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால் இந்த நிலை தொடர்கிறது ஆகையால் காமராஜரை இழிவு படுத்துவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் இதற்கு தமிழக அரசை உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று எஸ்.பி. மாரியப்பன் பேசினார்.
இதில் பெருந்தலைவர் காமராஜர் மீது மதிப்பு கொண்டவர்கள், வணிகர்கள் பொதுமக்கள் என பெருந்திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டுனர் ரமேஷ், முருகேசன், துரைசாமி, செல்வம், புஷ்பராஜ், சாமுவேல், வேல்முருகன், ஜெயபால் வக்கீல், நாராயணன், சிவா, குமார், பழக்கடை குமார், கணேசன் தர்மகத்தா, பெனிட்டோ போன்ற பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டுனர்.

