Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தமிழகம்விவசாயம்

கால்நடை தீவன முறைகளில் கவனிக்க வேண்டியவை!!!

Last updated: July 22, 2025 9:24 pm
Dinapuratchi
Share
SHARE

கால்நடைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய தீவன மேலாண்மைதான் முதன்மை அம்சம். இத்தகைய தீவனத்தை அளிப்பதற்கு சில நடைமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அது என்னென்ன? பார்ப்போம்!  மாடுகளின் தீவனத்தில் உப்பினைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். உப்பில் சோடியம் மற்றும் குளோரைடு என்ற இரண்டு தாது உப்புகள் இருக்கின்றன. உடலில் உள்ள செல்களில் இவ்விரு தாது உப்புகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும், இத்தாது உப்புகள் உடலில் சவ்வூடுபரவல் சரியாக நடைபெற உதவுகின்றன. ஒரு வளர்ந்த மாட்டிற்கு நாளொன்றிற்கு 30 கிராம் உப்பினைத் தீவனத்துடன் கொடுக்க வேண்டும். தாதுஉப்புக்கலவையும் கால்நடைகளுக்கு இன்றியமையாதது. கால்நடைகளுக்குத் தேவையான பல்வேறு தாதுஉப்புக்களைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்துள்ள கலவைதான் இந்த தாதுஉப்புக்கலவை. தாதுஉப்புக் கலவையினை அன்றாடம் கால்நடைகளுக்குத் தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும். பால் கொடுக்காத மாடுகளுக்கு நாளொன்றிற்கு 50 கிராமும், கன்றுகளுக்கு நாளொன்றிற்கு 10-15 கிராமும் கொடுக்க வேண்டும்.

உலர்தீவனங்கள் கொடுக்கும்போதும் சில விஷயங்களைக் கையாள வேண்டும். உலர்தீவனங்களை சிறு துண்டுகளாகவே நறுக்கிக் கொடுக்க வேண்டும். உலர்தீவனத்துடன் வெல்லப்பாகு மற்றும் உப்பு கரைசலினைத் தெளிக்கலாம். 1 கிலோ வெல்லத்தினையும் 1 கிலோ உப்பினையும் 4 லிட்டர் தண்ணீரில் கரைத்து உலர்தீவனத்தின் மீது தெளித்துப் பயன்படுத்தலாம். கறவை மாடுகளுக்கு நாளொன்றிற்கு 50 கிராம் இட்டு சோடா அல்லது ஆப்ப சோடாவைக் கொடுப்பதன் மூலம் தீவனச் செரிமானத்தினை அதிகரிக்கலாம். கன்றுகளின் தொழுவத்தில் உப்புக்கட்டி மற்றும் தாது உப்புக் கட்டிகளைக்கட்டாயம் தொங்கவிட வேண்டும்.செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு வெயில் காலங்களில் போதிய அளவு ஊட்டச்சத்துகள் மேய்ச்சல் மூலம் கிடைக்காது.

எனவே செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு மாலை நேரங்களில் ஊறவைத்த மக்காச்சோளம் அல்லது அடர்தீவனத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும். 25 கிலோ எடையுள்ள ஆட்டிற்கு 100 – 150 கிராம் மக்காச்சோளம் அல்லது அடர்தீவனத்தைக் கொடுக்க வேண்டும். 35 கிலோ எடையுள்ள ஆட்டிற்கு 200 – 250 கிராம் மக்காச்சோளம் அல்லது அடர்தீவனத்தைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதால் ஆடுகளில் எடை குறைவு ஏற்படுவதைத் தடுக்கலாம். தாய் ஆடுகளின் பால் உற்பத்தி குறையாமல் தடுக்கலாம். இதுதவிர மாலை நேரங்களில் புரதச்சத்து அதிகமுள்ள கடலைக்கொடி உளுத்தம் பொட்டு மற்றும் துவரைத் தொளும்புகளை ஆடுகளுக்கு கொடுக்கலாம். மேய்ச்சலுக்குச் செல்லாத குட்டிகளுக்கு மரஇலைகளைத் (வேப்பிலை, அகத்தி, சவுண்டல் மற்றும் கிளைரிசிடியா) தீவனமாகக் கொடுக்கலாம். கருவேலங்காயினை ஊறவைத்து அல்லது அரைத்துக் கொடுக்கலாம்.

Share This Article
Email Copy Link Print
Previous Article எள் விளைச்சலை முடக்கும் பூவிதழ் நோய்… கட்டுப்படுத்த சில வழிமுறைகள்!!!!
Next Article உனக்கான வாய்ப்பை நீயே உருவாக்கு!!!

You Might Also Like

அரசியல்இந்தியாதமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

குலையன்கரிசலில் காமராஜர் முழு உருவ வெண்கல சிலை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். அமைச்சர், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு

By Dinapuratchi
அரசியல்தமிழகம்

ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மூலம் திமுக அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும் : அமைச்சர்கள் கீதா ஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!

By Dinapuratchi
குற்றம்தமிழகம்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை -வழக்கில் 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பு!!!

By Dinapuratchi
குற்றம்தமிழகம்தற்போதைய செய்திதிண்டுக்கல்

உல்லாச ஆசையில் பைனான்சியர், பின்னர் கொத்தனாருடன் ஓட்டம்; இளம்பெண்ணின் செயலில் குடும்பம் எடுத்த விபரீத முடிவு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?