தூத்துக்குடி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயல் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் சகாயராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மீனவர் காங்கிரஸ் தலைவர் சிமியோன், மாவட்ட செயலாளர் இக்னேஷியஸ், ஜோனாத்தான் அமைப்புசாரா பிரிவு தலைவர் சேவியரம்மாள், வார்டு தலைவர் முனியசாமி மகளிர் காங்கிரஸ் இசக்கியம்மாள், இளைஞர் காங்கிரஸ் ரெனிஷ் பாபு, பொன்னரசி, நிர்வாகி விக்ரம் மாவட்டத் துணைத் தலைவர் ராஜாராம் உள்பட பலா் கலந்து கொண்டனர்.