தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலையோரம் வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த இடத்தில் எல்லாம் அனுமதி வழங்கலாம் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சாலையோர வியாபாரிகள் கடைகள் வைப்பதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் மாநகராட்சி சாா்பில் அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஏற்பாடு செய்து இருந்தார் அதன்படி சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உத்தரவின் பெயரில் கிழக்கு மண்டல அதிகாரிகள் விஇ ரோடு பயர் சர்வீஸ் முதல் சுகம் ஹோட்டல் வரை சாலைகளின் இருபுறமும் இருந்த கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது இதில் வேடிக்கை என்னவென்றால் வி.இ. சாலையில் மாநகராட்சி சார்பில் அனுமதி அளிக்கப்பட்ட சாலையோர கடைகள் முழுவதும் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா உத்தரவின் பெயரில் கிழக்கு மண்டல அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.
இதுபற்றி சாலையோர வியாபாரிகள் கூறுகையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் எங்களுக்கு அனுமதி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் நாங்கள் கடைகளை வைத்திருந்தோம் ஆனால் திடீரென்று மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா உத்தரவின் பேரில் அதிகாரிகள் அப்புறப்படுத்தி விட்டனர் ஆகையால் எங்களுக்கு மீண்டும் அந்த இடத்தில் மாநகராட்சி அனுமதிக்கப்பட்ட இடத்தில் கடை வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தற்போது மாநகராட்சி ஆணையர் செயல்பாடு தமிழக அரசுக்கு எதிராக உள்ளதா இல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக ஆணையர் உத்தரவு உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது எங்களின் வாழ்வாதாரமே தற்போது பாதிக்கப்பட்டுள்ளது என்று சாலையோர வியாபாரிகள் கூறினார்கள்.