தூத்துக்குடி வட்டம், மாப்பிள்ளையூரணி வருவாய் கிராமம் சிலுவை பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த இருதயராஜ் என்பவரின் மகன் மாதேஷ் (வயது 19) கடந்த 22ம் தேதி அன்று நண்பர்களுடன் புதிய இரண்டு சக்கர வாகனத்தில் குற்றாலம் சென்ற போது பாவூர்சத்திரம் அருகில் ஏற்பட்ட விபத்தில் மூளை சாவு அடைந்த நிலையில் 24ம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவரது உடல் உறுப்பு தானம் செய்ய எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் 25ம்தேதி பிரேத பரிசோதனைக்கு பின்பு மாப்பிள்ளையூரணி கிராமம் இந்திரா நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இறுதிச் சடங்கு நடைபெற்ற நிலையில் அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன், தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணிஸ்டாலின் முன்னிலையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு உடல் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.
மாப்பிள்ளையூரணி வாலிபா் விபத்தில் இறப்பு உடல்உறுப்பு தானம் அரசு மாியாதையுடன் நல்லடக்கம்