தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொதுமக்கள் கொண்டு செல்லும் ஸ்மார்ட் கார்டு பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யப்பட்டு தான் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஒவ்வொரு கடைக்கும் சர்வர் கொடுக்கப்பட்டு இணையதளம் மூலம் இணைப்பு இருந்தால் மட்டுமே பொதுமக்கள் கொண்டு செல்லும் ஸ்மார்ட் கார்டு பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்படும் இது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் கொடுக்கப்பட்டுள்ள சர்வர் இயங்கவில்லை அதுபோல நெட்இணைப்பு செயல்படாத காரணத்தினால் ஒரு நாளைக்கு ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் இரண்டு முதல் ஆறு ஸ்மார்ட் கார்டுகளுக்கு தான் பதிவு செய்ய முடிகிறது. மற்ற பொதுமக்கள் பொருட்கள் வாங்க நியாய விலை கடைக்கு செல்லும் போது பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும்போது சர்வர் மற்றும் நெட் இணைப்பு வேலை செய்யாததால் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க முடியவில்லை இதனால் ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் பொதுமக்களுக்கும் நியாய விலை கடை பணியாளர்களுக்கும் வாக்குவாதங்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது ஆகையால் தமிழக அரசு உடனடியாக இதுக்கொரு நிரந்தர தீர்வு காண வேண்டும் இல்லை என்றால் ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் கடை பணியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் தொடர்ந்து நடைபெறும் மோதல் போக்கு நடைபெறும் சூழ்நிலை உருவாகிறது ஆகையால் உடனடியாக தமிழக அரசு இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டுமென நியாய விலை கடை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் தமிழக அரசின் கோரிக்கை பரிசீலனை செய்யுமா இல்லையென்றால் தொடர்ந்து நியாய விலை கடை பணியாளர்களும் பொதுமக்களும் சர்வர் மற்றும் நெட் இணைப்பு செயல்படாத நேரத்தில் வாக்குவாதம் மோதல் தான் ஏற்படும் சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது தூத்துக்குடியில் மட்டும் 115 நியாய விலை கடைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.