Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஓய்வூதியர்களின் மருத்துவ உரிமைகளைப் பறிக்கும் காப்பீட்டுத் திட்டம் தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தல்

Last updated: July 29, 2026 11:42 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழகம் முழுவதும் வட்டத் தலைநகரங்களில், ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள பாதகமான மாற்றங்களைக் கண்டித்து நடைபெறும் அமைதியான மற்றும் சட்டபூர்வமான ஆர்ப்பாட்டங்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. வாழ்நாள் முழுவதும் அரசுப் பணியாற்றி, முதுமைக் காலத்தில் மருத்துவப் பாதுகாப்பை நம்பியிருக்கும் ஓய்வூதியர்களுக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் முழுமையான மருத்துவக் காப்பீட்டை வழங்குவது அரசின் தார்மீகப் பொறுப்பாகும். ஆனால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஓய்வூதியர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்குப் பதிலாக கூடுதல் பொருளாதாரச் சுமையையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஓய்வூதியர்களின் மாதாந்திர மருத்துவக் காப்பீட்டுப் பிடித்தத் தொகை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைப் பலன்களும் காப்பீட்டுத் தொகைகளும் குறைக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அதிகத் தொகையைப் பிடித்தம் செய்து, குறைந்த பலன்களை வழங்குவது சமூகநீதிக்கும் இயற்கை நீதிக்கும் எதிரான செயலாகும். ஒவ்வொரு நோய் மற்றும் சிகிச்சைக்கும் எவ்வளவு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும், எந்தெந்த சிகிச்சைகள் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன, எவை விலக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான முழுமையான பேக்கேஜ் விவரங்கள் இதுவரை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. அதேபோல் மருத்துவமனைகள் ஏ, ஏ1, பி, சி என எந்த அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதிலும் தெளிவில்லை. இத்தகைய மறைமுக நடைமுறைகள் ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதிப்பதோடு, திட்டத்தின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்குகின்றன. அவசரமான உயிர்காக்கும் சூழலில், பட்டியலிடப்படாத அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அத்தகைய நிலையில், சி பிரிவு மருத்துவமனைக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 60 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்ற நிபந்தனை மனிதநேயமற்றதும் நடைமுறைக்கு ஒவ்வாததும் ஆகும். அவசரநிலையில் நோயாளியோ அவரது குடும்பத்தினரோ மருத்துவமனையின் வகைப்பாட்டைப் பரிசீலித்துக் கொண்டிருக்க முடியாது. கண்புரை அறுவை சிகிச்சைக்காக இதுவரை ₹23,000 முதல் ₹30,000 வரை வழங்கப்பட்ட நிலையில், தற்போது ₹13,000 மட்டுமே வழங்கப்படும் எனக் கூறப்படுவது மிகப்பெரிய பின்னடைவாகும். மருத்துவச் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், காப்பீட்டுத் தொகையை குறைப்பது ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தையும் மருத்துவப் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கும். எனவே, உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பிடித்தத் தொகையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒவ்வொரு நோய் மற்றும் சிகிச்சைக்கும் நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை, மருத்துவமனை வகைப்பாட்டுக்கான அடிப்படை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் முழுப் பட்டியல் மற்றும் காப்பீட்டு நிறுவனம்– மருத்துவமனைகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்த விவரங்கள் ஆகிய அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும். மேலும், அவசரச் சிகிச்சைக்காக பட்டியலிடப்படாத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், முழுமையான மற்றும் நியாயமான காப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். கண்புரை அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கான குறைக்கப்பட்ட தொகைகள் திரும்பப் பெறப்பட்டு, உண்மையான மருத்துவச் செலவிற்கு ஏற்ப உயர்த்தப்பட வேண்டும். ஓய்வூதியர் சங்கங்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்து, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும். ஓய்வூதியர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க மாநில மற்றும் மாவட்ட அளவில் தனியான புகார் தீர்வு அமைப்பையும் அரசு ஏற்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களின் மருத்துவ உரிமைகளைச் சுரண்டும் எந்தத் திட்டத்தையும் ஏற்க முடியாது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு அலட்சியம் செய்யாமல், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பாதகமான விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி 2ம்கேட் ரயில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் மத்திய அமைச்சருக்கு பாஜக தலைவர் சித்ராங்கதன் கடிதம்
Next Article அனைத்து பகுதிகளுக்கு பாரபட்சமின்றி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினா் ஸ்ரீநாத் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ப்ாியங்காவிடம் பூங்கொத்து கொடுத்து சந்தித்தாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினா் ஸ்ரீநாத் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் கலெக்டா் விஷுமகாஜனை பூங்கொத்து கொடுத்து சந்தித்தாா்.

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி குறுக்குசாலை கீதாஜீவன் கல்லூரியில் மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் சீரமைப்பு பணிகள் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?