தூத்துக்குடி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் முரட்டு பக்தனாக இருந்து 30 ஆண்டுகள் வரை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக பணியாற்றி 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை நகர்மன்ற தலைவராகவும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் துறைமுக சபை பொறுப்பு குழு உறுப்பினராகவும் தொழிற்சங்க மேதையாக வலம் வந்த பெரியசாமி 1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆசிரியராக இருந்த கீதாஜீவனை மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட களம் இறக்கினார்.
அதில் வெற்றி கண்ட பின் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய காலத்தில் சிறந்த மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்போதைய பிரதமரிடம் விருதை பெற்றுக் கொண்டார். அதன்பின் 2006ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கலைஞர் அமைச்சரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சராக பணியாற்றினார். 2016-ல் இதே தொகுதியில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றினார். அதன்பின் அவரது தந்தை மறைந்த பின் தொடர்ந்து
10 ஆண்டுகளாக வடக்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வரும் நிலையில் 2021-ல் மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 2வது முறையாக அதே துறையின் அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தாா். பொது வாழ்வில் 30 ஆண்டுகள் களம் கண்டு தந்தையின் வழியில் தலைமை கழகம் உத்தரவிடும் அனைத்து பணிகளையும் முரட்டு பக்தன் பெரியசாமி செய்வதை போல் சிறப்பான முறையில் செய்து வந்தாா். திமுக எதிர்கட்சியாக இருந்த போது மு.க.ஸ்டாலின் சென்னை விழாவில் முரட்டு பக்தனின் மகள் கீதாஜீவன் பெண் சிங்கமாக பணியாற்றி வந்தாா். தமிழகத்தில் ஒரே பெண் மாவட்ட செயலாளராக இருக்கிறார் என்று புகழாரம் சூட்டினார். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் எட்டையாபுரம் சாலையில் முரட்டு பக்தன் காலத்தில் கட்டிய கலைஞர் அரங்கம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக பெண் சிங்கம் பணி பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என்று புகழாரம் சூட்டினார்.
கடந்த திமுக ஆட்சியின் போது தான் தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் மற்றும் எஸ்.பி அலுவலகம் மருத்துவ கல்லூாி ஓருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலகம் கடல்சாா் பயிற்சி அலுவலகம் தூத்துக்குடி நகராட்சியாக இருந்ததை மாநகராட்சியாக தரம் உயா்வு 2021 திமுக ஆட்சி அமைந்தபின் தூத்துக்குடி தொகுதியில் புதிதாக 13 நகா் நல அலுவலகங்கள் மின்சாரம் ஏற்றம் இறக்கம் காரணமாக 211 புதிய டிரான்ஸ்பாரம்கள் அமைக்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கடைகள் அங்கன்வாடிகள் என வளா்ச்சி பணிகளுக்கிடையில் சாலைகள் கால்வாய்கள் என பல திட்டங்களை நிறைவேற்றியுள்ள நிலையில் மழை வௌ்ளம் காலத்தில் இரவு பகல் பாராமல் அனைத்துபகுதிகளிலும் தன் உயிரையும் துச்சம் என மதித்து மக்கள் பணியாற்றினாா். தற்போது நடைபெற்ற தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பின்பு தொடா்ந்து மக்கள் பணி கட்சி பணியில் பாரபட்ச மின்றி ஈடுபட்டு வருகிறாா். பொதுவாழ்வில் 30 ஆண்டுகளும் மாவட்ட செயலாளராக பத்து ஆண்டுகளும் பணியாற்றி திமுக வளர்ச்சிக்கும் தலைவா் முக.ஸ்டாலின் நம்பிக்கைக்குாியவராகவும் செயல்பட்டு வருகிறாா் என்பது குறிப்பிடதக்கது.