தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை கனமழையின் காரணமாக, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுடலையாபுரம், மாதாநகர், இராஜபாளையம், தாளமுத்துநகர், பூபாண்டிபுரம், மாப்பிள்ளையூரணி ஆகிய பகுதியை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி வெள்ளநீர் தேங்கியுள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். மேலும், மோட்டார் பம்புகள் மூலம் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் குறித்தும், சாலைகளை சீரமைக்கும் பணிகள் குறித்தும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி இராஜபாளையத்தில், வெள்ள நிலையை ஆய்வு செய்ய வந்த இடத்தில் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, குழந்தைக்கு ‘மலர்’ என்ற பெயரை கனிமொழி எம்.பி. சூட்டினார். ஆய்வின்போது கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, வட்டாரவளர்ச்சி அலுவலா் பானு, உதவி செயற்பொறியாளர் ரவி, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், ஓன்றிய துணைச்செயலாளர் கணேசன், ஓன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.